Loading...

Category Archives: ஆன்மீகம்

வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 6

“திருதராஷ்டிரா, இத்தனையும் நான் பேசியதற்குக் காரணம், பாண்டு நந்தனர் யுதிஷ்டிரர் சத்திரிய தர்மத்தின்படி போருக்குத் தயாராகிறார். இதனால் பாதிக்கப்படப்போவது இருவருக்கும் நடுவே இருக்கின்ற நீங்கள் மட்டுமே. உங்கள் உடம்பு இரண்டாக பிரிந்து ஒரு பக்கத்தை ஒரு பக்கம் எதிர்த்தால் உங்கள்...

மேலும் படிக்க →

வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 5

இரண்டு நண்பர்களின் மனதோடு மனம் சேர்ந்தாலும் மறைக்க வேண்டிய இரகசியத்தை மறைக்கப்பட வேண்டும். ஆனால் அறிவோடு அறிவு சேரலாம். இத்தகைய நட்பு அழிவதில்லை. நண்பன் என்பவன் நன்றியுள்ளவனாக, தர்மம் உடையவனாக, சத்தியவானாக, உதார குணம்(இரக்கம்) உள்ளவனாக, உறுதியான அன்புடையவனாக, புலன்களை...

மேலும் படிக்க →

வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 4

யாருக்கும் அபகாரம் செய்யாத வாழ்க்கை நல்லது. பெண், அரசன், படித்த பாடம், மனித சாமர்த்தியம், பகைவன், சுகபோகம், தன் ஆயுள் மீது முழுமையான நம்பிக்கை உடையவன் அறிவுள்ளவன் அல்ல. அறிவுள்ளவனுக்கு வைத்தியம் ஏதுமில்லை. மந்திரமில்லை. மங்கள காரியம் இல்லை. அவன்...

மேலும் படிக்க →

வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 3

“விதுரா,” தாழ்ந்த குரலில் இரகசியம் போல திருதராஷ்டிரன் தன் சகோதரனை அழைத்தான். “வெகுநாளாய் மனதில் இருந்த கேள்வி உன்னை இப்போது கேட்கிறேன். வேதங்களில் மனித வயது நூறு என்று சொல்லப்பட்டிருப்பினும் அவ்விதம் அவர்கள் வாழ்வதில்லையே ஏன்? ” மன்னனின் குரலில்...

மேலும் படிக்க →

வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 2

எவனொருவன் தான் குற்றமாக நடந்தபடி மற்றவர் மீது அந்த குற்றத்தைக் கூறி ஆட்சேபணை செய்கிறானோ, எவன் திறமை இருக்கிறவனை வீணாக கோபிக்கிறானோ அவன் மிகப் பெரிய முட்டாளாவான். அதிகாரம் இல்லாதவனுக்கு எவன் உபதேசிக்கிறானோ, அனர்தத்தை எவன் உபாசிக்கிறானோ, எவன் கடுமையை...

மேலும் படிக்க →

வெள்ளிப் பதக்கம் – பகுதி 1

விதுரர் இது பேச வேண்டிய நேரம் என்று புரிந்து கொண்டு பேசினார். இங்கு பேசினால் ஏதேனும் பலன் ஏற்பட்டாலும் ஏற்படும் என்று பலரின் நன்மை கருதி அவர் பேசத் துவங்கினார். தாம் அழைக்கப்பட்டிருக்கிறோம், பேசுவதற்காக பணிக்கப்பட்டிருக்கிறோம் இந்த வாய்ப்பை விடக்கூடாது...

மேலும் படிக்க →

வெள்ளிப் பதக்கம்

துன்பம் நெருங்கி வருகிறபோதுதான் சமாதானம் பற்றியும் , சண்டையில்லா உலகம் பற்றியும் சிலருக்கு அக்கறை வரும். ஆனால் வந்த துன்பம் விலகி நின்றதும் மறுபடியும் கொக்கரிப்பு ஏற்படும். தர்மம் என்பது துன்பமே வரக் கூடாது என்று பேசப்படுவது அல்ல. துன்பம்...

மேலும் படிக்க →

ஒரு தகவல்

வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம் வாழிய நலம். உடல் நலம் தேவலாம். ஆனால் அதிகம் அலைய முடியாது. அலைய விரும்பவில்லை. ஊட்டியோ, கொடைக்கானலோ எனக்கு ஏற்ற இடமல்ல. என் மயிலாப்பூர் இல்லத்தை கொடைக்கானலாய் மாற்றிக் கொண்டு படித்தும், எழுதியும் வருகிறேன். நீண்ட...

மேலும் படிக்க →

இன்று மயிலை அறுபத்து மூவர் திருவிழா

எங்கள் சத்சங்கமட்டுமல்ல, மயிலையில் எங்கு நோக்கியும் விதம் விதமான அன்ன தானங்கள். இது பசியே இல்லாத உற்சவம். தாகம் தீர்க்கும் பெருவிழா. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிற கொண்டாட்டம். தன் வீட்டு கல்யாணத்திற்கு விருந்து தந்து விட்டு ஐயோ...

மேலும் படிக்க →

உள்ளே வெளியே

குண்டலினி சக்தி பொய்யல்ல. உண்மை. அது கனமான இருப்பு. மனிதர் எல்லா இயக்கத்துக்கும் அதுவே துணை. நான் குண்டலினியை நன்கு உணர்ந்திருக்கிறேன். சக்தி வெளியில் கரைந்திருக்கிறேன். நான் பொய்யனில்லை. எவரையும் ஏமாற்றுமெண்ணமில்லை. விஞ்ஞானத்தின் வலிவு மிகக் குறுகியது. மனதின் ஆழ்நிலை...

மேலும் படிக்க →