இரும்பு குதிரைகள்

குதிரைகள் பசுக்கள் போல
வாய் விட்டு கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காப் பணிந்து போகும் – இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் முதலாம் பாடம்.