எனக்கு ஆன்மீக வித்தை எதுவும் தெரியாது. என் குண்டலினியை ஏற்றி விடுங்கள் என்று கேட்கிறார்கள். நான் செய்வதறியேன். நான் எழுதப் பணிக்கப் பட்டிருக்கிறேன். “பால்குமார் ஈஸ் மை பென்” என்று கெளரவிக்கப்பட்டுருக்கிறேன். மேலும் சிலது சொல்லப்பட்டிருக்கிறது.

என் எழுத்தின் கனம் உணரப்படவில்லை. உணர்ந்தோருக்கு சொல்லத்தெரியவில்லை.

நான் வாழும் காலத்தில் இது நடக்காது. நான் இறந்தபிறகு அலசப்படுதலே முறை.

இன்னும் கனத்து ஆழ்ந்து எழுதவிருக்கிறேன். என் உள்ளார்ந்த இடத்தில் குரு உபதேசம் தொடர்கிறது.

இது பெரிய ரசாயனம்.

(08 நவம்பர் 2017 முகநூல் பதிவிலிருந்து)